Friday, May 11, 2007

பூ வாசம் புறப்படும்

ஆண்:
பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்...
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்....

பெண்:
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளுமென்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்

ஆண்:
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி....

(பூ வாசம்.........)

ஆண்:
புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

பெண்:
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஆண்:
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்

பெண்:
என் வெட்கத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா

(பூ வாசம்..............)

பெண்:
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது

ஆண்:
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது

பெண்:
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது

ஆண்:
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது

பெண்:
நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்

ஆண்:
மேகத்தை ஏமாற்றி
மண் சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா

(பூ வாசம்..............)

0 comments: