Thursday, May 17, 2007

காட்டுக் குயிலு

ஆ: காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
(காட்டு
குழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் சொர்க்கத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே
(காட்டு

ஆ: போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோ முன்னு
எண்ணிக் கொள்ளடா டோ ய்

ஆ: பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன

ஆ: தோட்டம் வச்சவன் தண்ணீர்
விடுவான் சும்மா நில்லடா டோ ய்

ஆ: ஊதகாத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பக்கூழம் பத்த வச்சு காயலாம்

ஆ: தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்

இரு: அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்
(காட்டு

ஆ: பந்தம் என்ன சொந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல

பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே

உள்ள மட்டும் நானே உசிர கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிகன்னு சொல்லுவேன்

ஆ: என் நண்பன் போட்ட சோறு தினமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்

இரு: சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு
தாளமிட்டு பாட்டுப்பாடும் வானம்படி நாம் தான் (காட்

0 comments: