Thursday, May 17, 2007

காதல் வந்ததும் கன்னியின்

பெ: நன நன நன... நன... நன... நன... நன நன நன
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு
தந்தானானா ..... தந்தானானா...... தந்தானானா.....

(காதல்)

பெ: தூங்காத காற்றும் துணை தேடி ஓடி
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா

ஆ: நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா

பெ: உள்ளே என்னால் அது காணாது
உன்னால் நின்றேன் ருதுவானது

ஆ: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது நன் நானான....

பெ: நன் நானான....

(காதல்)

பெ: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம்

ஆ: நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்

பெ: கனா கண்டால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்

ஆ: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய் நன் நானான....

பெ: நன் நானான....
(காதல்)

0 comments: