Tuesday, May 22, 2007

ஆகாய வெண்ணிலாவே

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் பூவாரம்
சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

3 comments:

Ramprax said...

Hi,
Do you know who the lyricist of the song is? I tried googling with no luck.
Ram
--

Unknown said...

Super song

Unknown said...

வாலி என நினைக்கிறேன்