Thursday, May 17, 2007

இரு விழியின் வழியே

பெ: இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது (விழி
ஆ: தொட்டில் இடும் இரு தேம்மாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
பெ: கட்டில் இசும் உன் காமன் கனி மலர் மாலை சூட வேண்டுமே
ஆ: கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு சேதி ஒன்று பார்க்கின்றேன்
பெ: கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
ஆ: கார் கால மேகம் வரும் பெ:கல்யாண ராகம் வரும்
ஆ: பாடட்டும் நாதஸ்வரம் பெ: பார்க்கட்டும் நாளும் சுகம்
ஆ: விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம் (விழி
ஆ: உன் மேனியும் நிலக்கண்ணாடியும் ரசம் பூச என்ன காரணம்
பெ: ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
ஆ: எங்கே எங்கே ஒரே தரம் என்னை உன்னில் பார்க்கிறேன்
பெ: இதோ இதோ ஒரே சுகம் நானும் இன்று பார்க்கிறேன்
ஆ: தென்பாண்டி முத்துக்களா பெ:நீ சிந்தும் முத்தங்களா
ஆ: நோகாமல் கொஞ்சம் கொடு
பெ: உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம் (விழி

0 comments: