Thursday, May 17, 2007

கடவுள் உள்ளமே ஒரு

பெ: கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
(கடவுள்

பெ: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும்
இறைவா என் இறைவா

பெ: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே

பெ: இது தான் இயற்கை
தந்த பாசபந்தமே

(கடவுள்

பெ: கண்ணிழந்த பிள்ளை
ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள்
கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்

பெ: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே

குழு: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே

பெ: என்றும் உனக்கே நாம் நன்றி சொல்லுவோம்
(கடவுள்

2 comments:

manickavachagam said...

அருமை. அருமை.

Anonymous said...

6383391781