Thursday, May 17, 2007

காடு திறந்தே

ஆண்: காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது.
காதல் உயிர்களை உடைக்கின்றது.

அடடா...

நெஞ்சில் வரும்
காதல் வலி
பூவில் ஒரு
சூறாவளியோ....ஓ...

பெண்: நெஞ்சை விட்டு வந்த
வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூல்கொண்டதோ?

ஆண்: உன்னைவிட்டு உடல்
மீளவில்லை
என் கால்கள் வேர்கொண்டதோ?

பெண்: பூமிக்கு வந்த பனித்துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு

ஆண்: யுகம்யுகமாய் நான் எரிந்துவிட்டேன்
பனித்துளியே என்னை அணைத்துவிடு
உறவே
உயிரே
உணர்வே

நெஞ்சில் வரும்
காதல் வலி
பூவில் ஒரு
சூறாவளியோ....ஓ...

ஆண்: சிற்றின்பத்தின் சின்ன வாசல்வழி
பேரின்பம் நாம் அடைவோம்

பெண்: கால்தடங்கள் அற்ற பூமியிலே
காற்றாக நாம் நுழைவோம்

ஆண்: சித்திரை மாதத்தை நான் நனைத்துக்
கோடையில் உனக்கொரு குளிர்கொடுப்பேன்

பெண்: மார்கழி மாதத்தை நான் எரித்து
முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்

ஆண்: அடியே
சகியே
சுகியே

நெஞ்சில் வரும்
காதல் வலி
பூவில் ஒரு
சூறாவளியோ....ஓ...

0 comments: