Thursday, May 24, 2007

நிஜமா?? நிஜமா??

நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??
நீ வந்த நொடி நிஜமா??
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??
நீ நான் நாம் நிஜமா??
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே..
மழை நின்ற போதும், மரக்கிளை தூறுதே...
பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே...
பார்க்கும் போதே கண்கள் பறி போகுதே...
( நிஜமா?? நிஜமா?? )

நேற்று இன்று நாளை என்பதென்ன ?? காலம் உறைந்து போனதே...
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச... கடவுளாக தோணுதே..
வேற்று கிரகம் போல எனக்கு.. எந்தன் வீடு ஆனதே...
வெற்று கோபம் என்ற அர்த்தம் மாறி.. வெட்கமாகி போனதே..
வண்ணத்து பூச்சி இறகால் மோதியே...
வானமும் விழுந்தால் அது தான் காதலே...
இடி மின்னல் மழை இந்த மூன்றுமே... இதயத்தில் தந்தால் அது காதலே...
( நிஜமா?? நிஜமா?? )

கோடை வாடை இளவேனில்காலம் கார்காலம நான்குமே..
காதல்காலம் எந்தகாலம் என்று உண்மை சொல்ல கூடுமோ??
கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு என்ற திசைகள் நான்குமே..
காதல் எந்த திசையில் செல்லுமென்று மெய் சொல்ல கூடுமோ??
கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே...
கடைசி வரைக்கும் சுமப்பேன் உன்னையே...
உயிர் அறை ஒன்றை உருவாக்கியே... உயிர் உள்ளவரை உன்னை போற்றுவேன்.

கனவா கனவா?? இது என்ன கனவா?? நீ வந்த நொடி கனவா??

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே...ஊஞ்சலே...

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே

(நெஞ்சினிலே)

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

(தங்கக்)

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்

(நெஞ்சினிலே)

ஒரு ஜீவந்தான் உன்

ஒரு ஜீவந்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

(ஒரு ஜீவந்தான்)

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

(ஒரு ஜீவந்தான்)

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையா
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நாந்தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்

(ஒரு ஜீவந்தான்


ஓ ப்ரியா ப்ரியா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

பார்க்காத என்ன பார்க்காத

பார்க்காத என்ன பார்க்காத
கொட்டும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல..
(பார்க்காத)

வேணா வேணாண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட
(பார்க்காத)

(பெண்)
வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாலும்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
(பார்க்காத)

கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!


(சொல்லத்தான்)

சின்ன பூவொன்று பார்வையை தாங்குமா..
உன்னை சிறகு எண்ணி தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது ஞாயமா..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொழுசும் உன் பெயர் சபிக்கின்றது..
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..
துயரங்கள் கூட அட சுவையாகுது..
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..
ரொம்ப ருசிக்கின்றது..!

(சொல்லத்தான்)

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..
நீயும் ஆனந்த பைரவி ரகமா..
இதயம் அலை மேல் சருகானதே..
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..
வந்து மோதிய இரும்பு மேகமே..
தேகம் தேயும் நிலவானதே..
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..
ஏன் குடை சாய்ந்தது..
காதல் சுகமானது..!

தேவதையைக் கண்டேன்

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.
(தேவதையை)


தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்தரை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே
(தேவதையை)

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்
சோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.
(தேவதையை)
(ஒரு வண்ணத்துப்பூச்சி)

ஏதோ நினைக்கிறேன்

பெண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் (4)
ஆண் : பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

பெண்: அடடா அடடா காதல் அழகிய தொல்லை!
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்(2)

ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)

பெண்:ஊரைச் சுற்றிப்பார்த்தாலும்
உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என்னன்பே

ஆண்:யாரைப்பற்றிக்கேட்டாலும்
உன்னைப்பற்றிச் சொல்கிறேனே அன்பே என்னன்பே

பெண்: உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே!
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே

ஆண்: இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம்
இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம்!
அடடா அடடா காதல் அழகிய தொல்லை

பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்!
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)

பெண்:கண்ணாடிக்குப் பொட்டு வைத்தே
உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா?

ஆண்: கண்மூடீயும் உன்னைக் கண்டேன்
கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா?

பெண்: அக்கம் பக்கம் யாருமில்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்

ஆண்: நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை!

பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்

ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பெண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்

ஆண்: பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

பெண்:அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்

சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா

சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்ஞில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு.

என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்

என்னவோ என்னவோ

என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன்சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன்சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ...
ப்ரியமானவனே.
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை

மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா?
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா?
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா?
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா?
விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா?
இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா?
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா?
என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா?

என்னவோ என்னவோ

இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா?
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா?
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா?
கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா?
ஓ.. ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா?
பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா?
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா?
ப்ரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா?

என்னவோ என்னவோ

Wednesday, May 23, 2007

பூங்கதவே தாள் திறவாய்

பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

(பூங்கதவே தாள்)

திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.


(பூங்கதவே தாள்)


ஏதேதோ எண்ணம்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே


சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு


குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்


பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்



தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே


பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகல் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட

என் இனிய பொன்

என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....

பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே
வென்னிலா வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....


பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் பிம்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே....

Tuesday, May 22, 2007

மயங்கினேன் சொல்ல

பெ:
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
(மயங்கினேன்)
ஆ:
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
பெ:
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
ஆ:
இரு கண்ணும் என் நெஞ்சும்
பெ:
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
(மயங்கினேன்)
ஆ:
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்,
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
பெ:
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
ஆ:
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?
பெ:
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!
ஆ:
அந்த நாளை எண்ணி நானும்
பெ:
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்
(மயங்கினேன்)

உனக்கென்ன மேலே

ONE...TWO...THREE...FOUR
தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம்
தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
(உனக்கென்ன)
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம்

ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)

ஆசையக் காத்துல

ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
(ஆசைய)
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
(ஆசைய)
தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில


பூவரசம்பூ பூத்தாச்சு

பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?
(பூவரசம்பூ)
நடப்பதோ மார்கழி மாசம்,
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்
(நடப்பதோ)
நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,
மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!
(பூவரசம்பூ)
கர கர வண்டி காமாட்சி வண்டி,
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம்பூ

சின்னஞ்சிறு வயதில்

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சபாஷ்
பலே

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி


நீல வான ஓடையில்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

இளைய நிலா பொழிகிறதே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே


மனம் விரும்புதே உன்னை

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

கண்மணி அன்போடு

கண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதான்
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதே தான் பிரமாதம் கவிதை படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ

(கண்மணி...........)
ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதுவும் எழுதிக்கோ
நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!
எல்லாம் போட்டுக்க
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா? தாங்காது
அபிராமி! அபிராமி! அபிராமி!
அதையும் எழுதணுமா?
இது காதல்!
என் காதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைககும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே பொன் மானே
என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....
எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா

சுப லாலி லாலியே லாலி லாலியே!
அபிராமி லாலியே லாலி லாலியே!

முன்பே வா என்

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..

உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா உயிரே வா..
உன் முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)

[பெண்]
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..
மண பூ வைத்து பூ வைத்து..
பூவுக்குள் தீ வைத்தாய்..
(ஒ ஓ...)

[ஆண்]
தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் - நாம் -நாம் நனைந்து வாட
என் நாணத்தில் உன் ரத்தம்..
நீ ஆடைக்குள் உன் சத்தம் ............
.உயிரே........ ஒ ஓ...

[பெண்]
பொழி ஒரு சில நாளில் தனி
யாண்ட ஆண் தரையில் நீந்தும்

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் நானே என்னை நானே
உன் அன்பே வா என் அன்பே வா..

[பெண்]
முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்...

[இசை..]

[ஆண்]
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள்
வேர ராரும் வந்தாலே
தகுமா....?..

[பெண்]
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும் சாய்ந்தாலே
தகுமா....?..

[ஆண்]
நீயும் செங்குள செரும்
கலந்தது போலே
கலந்திடலாமா......

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும்
நீங்கள் யார்...

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)


காத்திருந்து காத்திருந்து காலங்கள்

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி

(காத்திருந்து)

முக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெத்டுது நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்ச இடம் காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிக்கும் பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு

(காத்திருந்து)

நீரு நெலம் நாலு பக்கம் நான் திரும்பிப் பார்த்தாலும்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அத்தனையும் நீதானே
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆணையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனச
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் ஒன் மனச
நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு

(காத்திருந்து)

சொல்லாமல் தொட்டுச்

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

(சொல்லாமல்)

ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
அமிலம் அருந்திவிட்டேன்
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூப் பறித்தவள் நீதானே

(சொல்லாமல்)

ஓ பெண்களின் உள்ளம் படுகுழியென்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஓ கரையைக் கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே

(சொல்லாமல்)


உன்னோடு வாழாத வாழ்வென்ன

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்குதே

நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில்
என்னை ஏந்தத்தான்

(உன்னோடு வாழாத)

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே
நீ போனால் நான் இல்லையே
நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையெ
ஆம் நமக்குள் ஊடலில்லை

(உன்னோடு வாழாத)

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வென்
அன்பே தீயாயிரு
நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மட்டும் நேசிக்கிறென்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை
காதலோடு பேதம் இல்லை

(உன்னோடு வாழாத)

ஜெர்மெனியின் செந்தேன் மலரே

ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்

சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கன்ன அழகே
காதல் நாயகனே...
காதல் நாயகன் பார்வை கண்டதில்
நான் எனை மரந்தேன்

(ஜெர்மெனியின்)

பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி
என்னாளுமே கொண்டாடலாம்
லா ல லா லா லா குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா லா லா எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்

(சித்திரமே)

பேரின்பமே என்றாலென்ன - அதை
நீயென்னிடம் தந்தாலென்ன
பேரின்பமே நீதானம்மா - அதை
நீயென்னிடம் சொன்னாலென்ன
லா ல லா லா லா ????
லா ல லா லா லா ????
வெகு நாளாக ஆசை
உன் தோளில் பூமாலை போலாட வந்தேன்
நீ சொல்லும் நேரம் சொர்க்கம்

(ஜெர்மெனியின்) .........


காதல் பிசாசே காதல் பிசாசே

காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை
கனவென்னை கொத்தித் தின்றால் பரவாயில்லை
இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை
(காதல் பிசாசே)

கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ
கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும்
பூவாசம் நீ தந்து போனாயடி
பையா ஏ பையா என் சுவாசத்தில்
ஆண் வாசம் நீயென்று ஆனாயடா
அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை
(காதல் பிசாசே)

கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ
கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய்
ரெட்டைப்பிறவி நீ நீ நீ
அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்
அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்
அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை
(காதல் பிசாசே)


கொஞ்சம் கொஞ்சம்

கொஞ்சம் கொஞ்சம்
எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்க
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம்
எனக்குள் ஆசை இருக்க
ஏன் புரியவில்லை
வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இருந்தானே
இது காதல்தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே
உன்னைத் தொலைக்காதே
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே அழைக்காதே
உன்னைப் புதைக்காதே
(கொஞ்சம் கொஞ்சம்)

இவன் இருளா இல்லை ஒளியா
எனக்குள் குழப்பம் புரியவில்லை
இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்
எனக்குள் இவனில்லை இவனுக்குள் நானில்லை
இது சரியா புரியவில்லை
காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை
வந்துவிட்டதா புரியவில்லை
(ஏ பெண்ணே)

எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான்
எப்படிப் புகுந்தான் புரியவில்லை
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான்
என்ன விடையோ
வழக்கம்போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்
என்ன நினைப்பான் புரியவில்லை
நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால்
தவறில்லையா புரியவில்லை
(ஏ பெண்ணே)
(கொஞ்சம் கொஞ்சம்)
(ஏ பெண்ணே)

சினேகிதனே சினேகிதனே

நேற்று முன்னிரவில் உன்னி
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2)
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்யவேன்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
(நேற்று முன்னிரவில்)

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் (2)
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்புமூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
(ஸ்னேகிதனே)

உயிரின் உயிரே

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாய்
நேரம்கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அணைத்துக் கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின் உயிரே)

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்திச்செல்ல
கனவு வந்து கண்ணைக்கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரைத் தேடும்
விலகிப்போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்
(உயிரின் உயிரே)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணைமுறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ
நீ நீ நீ
(உயிரின் உயிரே)
(நகரும் நெருப்பாய்)

சுட்டும் விழிச் சுடரே

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

மெல்லினம் மார்பில் கண்டேன்,
வல்லினம் விழியில் கண்டேன்,
இடையினம் தேடி இல்லை என்றேன்.
தூக்கத்தில் உலறல் கொண்டேன்,
தூரலில் விரும்பி நின்றேன்,
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்.
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்.
உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.
உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

மரங்கொத்திப் பறவை ஒன்று,
மனங்கொத்தி போனதின்று,
உடல் முதல் உயிர் வரை தந்தேன்.
தீ இன்றி திரியும் இன்றி,
தேகங்கள் எரியும் என்று,
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்.
மழை அழகா? வெயில் அழகா?
கொஞ்சும் போது மழை அழகு.
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு.
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு.

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.


ஆலங்குயில் கூவும் ரயில்

என்ன தவம் செய்தனை யசோதா?
என்ன தவம் செய்தனை யசோதா?
எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா?

ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
கண்ணா! கண்ணா! கண்ணா!

செல்ஃபோன்
இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது,
தொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே.

சிகரெட்
விரல்களின் இடையே ஒரு விரல் போல,
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.

ஓகே… அ… ஆ… வெட்கம்
இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்.

மீசை
இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான்.
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!

திருக்குறள்
இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,
இருவரும் இது போல இருந்தால் சுகம்.

நிலா
இரவினில் குளிக்கும் தேவதை இவளோ,
வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.

சரி, கண்ணாடி
இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே!

ம்… காதல்
கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ம்ம் ம்ம்
ம்…
நம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா!

வாவ், பியூட்டிஃபுல்…
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!

ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!

என்ன தவம் செய்தனை யசோதா?
எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை?
என்ன தவம் செய்தனை?
என்ன தவம் செய்தனை, யசோதா?


எனக்குப் பிடித்த பாடல்

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

ராசா ராசா உன்ன

பெ: ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்
நெஞ்சுல ரோசா பூவப் போல
ஆ: அடி கண்ணே கண்ணே
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணு மணியப் போல
பெ: என்ன பொத்தி வக்கும் எங்க பட்டாயத்துல
ஆச பொத்தி வச்சேன் தினம் ஒன் நெனப்புல
ஆ: நீயும் இல்லாம நானும் இல்ல

(ராசா)

ஆ: ராசாத்தி நீயும் தான் பூக்கோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்
பெ: சாமிய சந்திச்சா என்னாளும் வாழத்தான்
உன்னோடு சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்
ஆ: தோளிலே ஊஞ்சல் கட்டி தோக மயில தாலாட்டுவேன்
பெ: வீசும் காத்து ஜல்லடையாலே ஜலிக்க பூசி எடுப்பேன்
உனக்கு மூச்சி கொடுப்பேன்
(ராசா)
ஆ: முல்லப்பூ காம்பு தான் உன் கைய குத்தாதா
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா
பெ: செம்மண்ணு புழுதி உன் கண்ணில் விழுமே
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா
ஆ: மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி
பெ: உனக்கு வலிச்சா அரை நொடி நானும்
உசிர கையில் எடுப்பேன் உனக்கு நானும் கொடுப்பேன்

(ராசா)

உன் சமையல் அறையில்

ஆ: உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா
பெ: நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா
(உன்
ஆ: நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா
பெ: நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா
ஆ: ஆ.... நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா
(உன்
பெ: நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா, கன்னங்களா
ஆ: ஆ.... நான் தீண்டல் என்றால் நீ விரலா, ஸ்பரிசங்களா
பெ: ஆ.... நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா, தாலாட்டா
ஆ: ஆ.... நீ தூக்கம் என்றால் நான் மடியா, தலையணையா
பெ: ஆ.... நான் இத்யம் என்றால் நீ உயிரா, துடிதுடிப்பா
(உன்
ஆ: நீ கவிதைகள் என்றால் நான் வேரா விதை நிலமா
பெ: ஆ.... நீ விருந்து என்றால் நான் பசியா, ருசியா
ஆ: ஆ.... நீ கதி என்றால் நான் சிறையா, தண்டனையா
பெ: ஆ.... நீ மொழிகள் என்றால் நான் தமிழா, ஓசைகளா
ஆ: ஆ.... நீ புதுமை என்றால் நான் பாரதியா, பாரதிதாசனா
நீ தனிமை என்றால் நான் துணையா, தூரத்திலா
பெ: நீ துணைதான் என்றால் நான் பேசவா, யோசிக்கவா
ஆ: நீ திரும்பி நின்றால் நான் நிற்கவா, போய் விடவா
பெ: ஆ.... நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா
ஆ: ஆ.... நீ காதல் என்றால் நான் சரியா தவறா

பெ: உன் வலது கையில் பத்து விரல்
குழு: பத்து விரல்
என் இடக்கையில் பத்து விரல்
குழு: பத்து விரல்
தூரத்து மேகம் தூரல்கள் சிந்த தீர்த்த மழையில் தீக்குளிப்போம்

ஆகாய வெண்ணிலாவே

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் பூவாரம்
சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

செந்தாழம் பூவில்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழ்ம்பூவில்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்


இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்

மண்ணில் இந்தக்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
ச்ந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்க்ங்குமமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

(மண்ணில் இந்த)

நாதம் என் ஜீவனே

தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

Monday, May 21, 2007

பொன்மாலைப் பொழுது

ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா

பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..

[இது ஒரு பொன்மாலைப் பொழுது]

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்


கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா


நிலாவே வா செல்லாதே வா

நிலாவே வா ..
செல்லாதே வா ..

என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா ..
செல்லாதே வா ..

காவேரியா கானல் நீரா -
பெண்மை என்ன உண்மை ?

முள்வேலியா - முல்லைப்பூவா .
சொல்லு - கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும்சிறு்சி பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..

நிலாவே வா ..
செல்லாதே வா ..

பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட
சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

நிலாவே வா ..
செல்லாதே வா ..

என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா ..
செல்லாதே வா ..
என்னாளும் உன் பொன்வானம் நான்

தென்றல் வந்து தீண்டும்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை


கல்யாண தேனிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

[[
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
]]

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

[[
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
]]

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா

[[
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
]]

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

[[
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா


நினைக்கத் தெரிந்த மனமே

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

(நினைக்கத்)

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா

(நினைக்கத்)

மலர்ந்தும் மலராத பாதி

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

ஆண்:

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

ஆண்:

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
வாழப் பிறந்தாயடா

பெண்:

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

ஆண்:

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

பெண்:

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா

ஆண்:

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண்:

அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

நெஞ்சம் உண்டு, நேர்மை

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு

கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

இரண்டில் ஒன்று பார்பதற்கு தோழை நிமிர்த்து
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

நான் பார்த்ததிலே அவள்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

(நான் பார்த்ததிலே)

இடையோ இல்லை இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான்
உயிர் நீயே என்று நினைத்தான்
இன்று கண்ணால் சொல்லி முடித்தான்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ

(நான் பார்த்ததிலே)

மாலையில் யாரோ

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)


கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க
அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)

குடகு மலை காற்றில்

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான் தன் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி என் வழி தானே மானே

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தென்மாங்கே
-பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னம் தனியாக நிற்க்கும் தேர் போலா ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னா மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே

நீ கானு இரண்டு நீஙக ராகம் கொண்டு பாட்டு பாடுது

குடடு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த
பைங்கிளி

மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைனதது மாமா
நினசு தவிசேனா நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாறாமட்டேன்

ஏதோ ஒரு பாட்டு

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

அவள் பறந்து போனாளே

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

மயக்கமா கலக்கமா

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)

எங்கிருந்தாலும் வாழ்க

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க

Friday, May 18, 2007

தெய்வம் தந்த வீடு

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைதானா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

நறுமுகையே நறுமுகையே

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னினவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2

கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா (2)
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் (2)
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2)
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் (2)
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

குருக்கு சிறுத்தவளே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

(குருக்கு)

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

(குருக்கு)

கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே

கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசறியே

வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல

அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இள
நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே

(குருக்கு)

ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே

ஒம்முதுக தொலச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ

உசிர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே

(ஒரு கண்ணில்)

குருக்கு சிருத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்…ஒன்னக் கொஞ்சம் பூசுவேன்யா
உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்…மாத்துவேன்யா

ஒளிமயமான எதிர்காலம்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

(ஒளிமயமான)

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

(ஒளிமயமான)

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

(ஒளிமயமான)

Thursday, May 17, 2007

நினைவுகள் நெஞ்சினில்

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எரிய
பெண்னே உன்னால் முதிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

(நினைவுகள்)

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை
சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி என்
மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
(நினைவுகள்)

நினைத்து நினைத்து பார்த்தால்

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ......
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ......
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா
காதலா உன்னுள் வாழ்கிறேன்
(நி

நிலவு தூங்கும் நேரம்

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை

(நிலவு தூங்கும் நேரம்... )

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே!

(நிலவு தூங்கும் நேரம்... )

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே

(நிலவு தூங்கும் நேரம்... )

ஓ நெஞ்சே நீதான்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

மின்னலைப் பிடித்து

ஆ: மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து
வீதியில் விட்டு விட்டார் இப்படி இங்கொரு
பெண்மையை படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்து
என்னைத்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ... மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் போது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

(மின்ன)

ஆ: நிலவின் ஒளியை பிடித்து பிடித்து பாலில் நனைத்து
பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டாய் உலக
மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து
அமைத்து பெண்ணை சமைத்து விட்டார் அழகு என்பது
ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும்
இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா

(மின்ன)

ஆ: மின் மினி பிடித்து மின் மினி பிடித்து கண்களில் பறித்து
கண்களில் பறித்து கண்மணி கண் பறித்தாள் தங்கத்தை
எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில்
குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் காவித்துறவிக்கும் ஆசை
வளர்த்தவள் ஆணுக்கும் பொண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ.....
தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட மறைந்த பாகங்கள்
உயிரை வாங்கிட ஜீவன் மரணம் ரெண்டும் தருபவனே

(மின்ன)

மன்மதனே நீ கலைஞன்

பெ: மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரல
உந்தன் ரசிகை நானும் உனக்கே புரியவில்லை
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை.......
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை........

(மன்மதனே

நானுமோர் பெண்ணென பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்னும்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டு இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக் கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அதுதான் சரித்திரமோ....

மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னை வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மெண்டு முழுங்கவோ
உந்தன் முன்னாடி மஞ்சம் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதித் தருகிறேன்
என்னை ஏற்றுக் கொள்ளூ....
ஆயுளின் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்
பார்த்து கொள்ளு...


மனசே மனசே

மனசே மனசே மனசே மனசே
குழப்பமென்ன இது தான் வயசே காதலிக்க

ஆ: பூக்கள் மீது பனி துடைத்து
கவிதைகள் எழுதுகிறேன்
பெ: காதல் கடிதம் நீ கொடுத்து
நிலவினை தூதுவிடு (

மனசே)

ஆ: நீ தினம் தினம் சுவாசிக்கத்தானே
காற்று தென்றலாய் நானும் ஆகவா
பெ: நீ இனி தினம் வாசிக்கத்தானே
உந்தன் கையில்நான் வீணையாகவா
ஆ: மழை இல்லை நனைகிறேன்
நம் காதல் மின்சாரமா
பெ: உன்னை கண்டு உறைகிறேன்
உன் பார்வை மின்சாரமா
ஆ: என்னை தந்தேன் உன்னைக் கொடு
பெ: உன் கனவிலே நான்வரத்தானே
தினமும் இரவிலே விழித்திருப்பேன்
ஆ: உன் மனதிலே குடிவரத்தானே
உனது விழியிலே நீந்திடுவேனே
பெ: ஒரே முறை நிழல் தொடும்
எங்கெங்கும் நீயாகுமா
ஆ: ஒரே ஒரு வரம் கொடு
உன்னோடு நான் வாழவே
பெ: சுகம் தரும் கடல் இதோ

(மனசே)

பனி விழும் மலர்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
(பனி விழும்)
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
(பனி விழும்)
சேலை மூடும் இளஞ்சோலை, மாலை சூடும் மலர்மாலை
(சேலை)

இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

(பனி விழும்...........)

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
(காமன்)
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..

(பனி விழும்.........)

மாலை என் வேதனை

ஆ: மாலை என் வேதனை கூட்டுதடி காதல்
தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
(மாலை

காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி
காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா
(மாலை

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ
வாசங்கள் பேசாத பதிலா தம்பி மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ
கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி
அவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்

பெ: வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்

ஆ: மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே
(மாலை

மானின் இரு கண்கள்

ஆ: மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே

பெ: உள்ளதெல்லாம் அள்ளித் தரவா வா வா
வஞ்சியென்றும் வள்ளளல்லவா? காதல்
மல்லிகை வண்டாட்டந்தான்
போடு நீ கொண்டாட்டந்தான்

(மானின்

முக்குளித்து முத்தெடுத்து சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கணையாய் நான் தொடுத்து
வண்ணமொழிப் பெண்ணுக்கென காத்திருக்க

பெ: மொய் குழலில் பூ முடித்து
மங்கலமாய்ப் பொட்டு வைத்து பெய்யணைக்க கையணைக்க
மன்னவனின் நல்வரவைப் பாத்திருக்க

ஆ: இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக்கூடாதோ?

பெ: உன்னைத் தொடத்தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதோ?

ஆ: முன்னழகும் பின்னழகும் ஆட
இளமையொரு முத்திரையை
வைப்பதற்கு வாட மயக்கும்

(மானின்

பெ: ஊசி இலைக்காடிருக்க உச்சி மலை மேடிருக்க
பச்சைக்கிளி கூடிருக்க பக்கம் வர வெக்கமென்ன மாமா

ஆ: புல் வெளியில் மெத்தை இட்டு
மெத்தையிலே உன்னை இட்டு சத்தமிட்டு முத்தமிட
உத்தரவு இட்டு விடு நீ எனக்கு

பெ: அந்தி பகல் மோகம் வந்து அங்குமிங்கும் போராட

ஆ: எந்தப்புரம் காணும் போதும் அந்தப்புரம் போலாக

பெ: செங்கரும்புச் சாறெடுக்கத்தானே
உனக்கு ஒரு சம்மதத்தைத் தந்துவிட்டேன் நானே

வசீகரா என் நெஞ்சினிக்க

வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

(வசீகரா...........)

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

(வசீகரா................)

கொஞ்ச நாள் பொறு

ஆ: கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி
இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா ஹே.... ஹே....

காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்

குழு: ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

ஆ: ஓ.. நேத்து கூடத் தூக்கத்தில பாத்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்துக் கோர்த்து வச்ச மால போல்
வேர்த்துக் கொட்டி கண் முழுச்சுப் பார்த்தா
அவ ஓடிப் போனா உச்சி மலக் காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப் போனாப் பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீயப் பத்த வெப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசியக் கொடி போல குத்தி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
(ராசா
பெ: ம்...மா பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலியே எம்மாமன் கண்ணு தூங்கலியே

ஆ: என்னொடு தான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி கைக்கூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில்
செஞ்சுவச்ச தேரா என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக

குழு: ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
(கொஞ்ச

கவிதை இரவு இரவு

பெ: கவிதை இரவு இரவு கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை

ஆ: நிலவின் கனவு கனவின் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை

பெ: ஏன் இன்று ஏன் இன்று என் உதடுகள்
என் மனம் உளறியது

ஆ: ஏன் இன்று ஏன் இன்று
உன் அழகுகள் இக்கனம் பதறியது

(கவிதை

பெ: நீ செல்ல மிருகம் நல்ல
நரகம் நடுவில் நான் யாரோ
ஆ: நான் பிள்ளை பருவம்
இன்ப வடிவம் இடையில் நீ தேரோ
பெ: நீ நெஞ்சில் நடுவே
உந்தன் உயிரை உழுது நடவேண்டும்
ஆ: நீ நெற்றி முழுதும் உந்தன்
அழகை உதறி விடவேண்டும்
பெ: சில நேரம் மார்கழி ஆகிறாய்
சில நேரம் நீர்துளி ஆகிறாய்
ஆ: எதுவாக நான் ஆன போதிலும்
என் நீ நீ நீ.......... நீந்துகிறாய்
(நிலவின்
ஆ: நீ ரெண்டு விழியால் சண்டை இடலாம்
எதுவும் தவறில்லை
பெ: நான் பத்து விரலால் முத்தமிடலாம்
அதுவும் தவறில்லை
ஆ: நான் பள்ளியறையில் தொல்லை தரலாம்
அதிலும் தவறில்லை
பெ: நீ என்னை முழுதும் தின்று விடலாம் எதிலும் தவறில்லை
ஆ: ஏய் உனது ஆசை யாவையும் பேசிட
ஒரு கோடி ஆயுளும் கூடுமே
பெ: விடிகாலை தாவணி மாதிரி
அது நீ நீ................ ஆகிடுமே
(கவிதை

உச்சி வகுந்தெடுத்து

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ

பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க

வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க

ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ

பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

கண்மணியே பேசு

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையோ

ஆ: அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
பெ: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
ஆ: தோளிலும் என் மார்பிலும்
கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

பெ: உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
ஆ: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
பெ: வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....


நானாக நானில்லை தாயே

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

(நானாக

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

(நானாக)

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை

(நானாக)