Tuesday, May 22, 2007

சுட்டும் விழிச் சுடரே

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

மெல்லினம் மார்பில் கண்டேன்,
வல்லினம் விழியில் கண்டேன்,
இடையினம் தேடி இல்லை என்றேன்.
தூக்கத்தில் உலறல் கொண்டேன்,
தூரலில் விரும்பி நின்றேன்,
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்.
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்.
உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.
உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

மரங்கொத்திப் பறவை ஒன்று,
மனங்கொத்தி போனதின்று,
உடல் முதல் உயிர் வரை தந்தேன்.
தீ இன்றி திரியும் இன்றி,
தேகங்கள் எரியும் என்று,
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்.
மழை அழகா? வெயில் அழகா?
கொஞ்சும் போது மழை அழகு.
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு.
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு.

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.


0 comments: