Thursday, April 19, 2007

Ullam Ketkume

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
(ஓ மனமே)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
கணுக்கள்தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா
தோல்விகள் இன்றி பூரணமா
(ஓ மனமே)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
(ஓ மனமே)

நேற்று முன்னிரவில்

நேற்று முன்னிரவில் உன்னி
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2)
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்யவேன்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
(நேற்று முன்னிரவில்)

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் (2)
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்புமூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
(ஸ்னேகிதனே)

ஒன்றா ரெண்டா

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் (ஆ) நான் கண்ட (ஆ) நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால் (ஆ) பலகதைகள் (ஆ) பேசிடலாம் கலாபக்காதலா
(ஒன்றா ரெண்டா)

பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன்
(ஒன்றா ரெண்டா)

சந்தியாக்கால மேகங்கள்
பொன்வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழிய
நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நானுன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே
வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் (ஆ) நான் கண்ட (ஆ) நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால் (ஆ) பலகதைகள் (ஆ) பேசிடலாம் கலாபக்காதலா

எகிறி குதித்தேன்

எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ (2)

Hey ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
(ஆலெ ஆலெ)

காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2)
(எகிறி குதித்தேன்)
(ஆலெ ஆலெ)

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல்முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(ஆலெ ஆலெ)

மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(ஆலெ ஆலெ)

மஞ்சள் வெயில்

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே
(வெண்ணிலவே)

பூலோகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பதுபோல்
பேசிப்பேசித் தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே
உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம்வந்து
குறுகுறு மின்னலென குறுக்கே ஓடுதே
(வெண்ணிலவே)
(மஞ்சள் வெயில்)
(தயக்கங்கள் விலகுதே)

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை நனைகிறார் நனைகிறார்
யாரோ யாரோ யாரோ அவள்
ஹே யாரோ யாரொ யாரோ அவன்
ஒரு காலும் காலும் வெட்டிக்கொள்ள
இருதண்டவாளம் ஒட்டிச்செல்ல
(வெண்ணிலவே)

இன்னும் கொஞ்சம் நீளவேணும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையொ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி
நின்றுபார்க்க நேரமின்றி
சென்றுகொண்டே இருந்தேனே
நிற்கவைத்தாள் பேசவைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி

பார்த்த முதல்நாளே

பார்த்த முதல்நாளே உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப்பிழைபோலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப் பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன் முகம் உன் முகம்
என்றும் மறையாதே

காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசிக் காட்சிக்குள்
நிற்பதும் உன் முகமே
எனைப்பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல்
உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
போகின்றேன் என நீ பலநூறு முறைகள்
விடைபெற்றும் போகாமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உனைப் போகச்சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
(காட்டிக் கொடுக்கிறதே)
(ஓர் அலையாய்)

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக்கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்தது என்று நினைத்தேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரந்தோறும் செதுக்கிட வேண்டும்
கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
(பார்த்த முதல்)
(ஓர் அலையாய்)

பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல்

மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே

பொன் மான் இவளா...
உன் வானவில்லா...
பொன் மான் இவளா...
உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)
ஓஓஓஓ...

தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)
(சிறுகச் சிறுக)

கருகரு விழிகளால்

கருகரு விழிகளால்
ஒரு கண்மை என்னைக் கடத்துதே
ததும்பிடத் ததும்பிட
சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

நீ ஒரு மல்லிச்சரமே
நீ இலைசிந்தும் மரமே
என் புது வெள்ளிக்குடமே
உன்னைத்தேடும் கண்கள்
ஏன் நீ தங்கச்சிலையா
வெண் நுரை பொங்கும் மலையா
மன் மதன் பின்னும் வலையா
உன்னைத்தேடும் கண்கள்

புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா
(நீ ஒரு மல்லிச்சரமே)

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும்போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகைபோலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கருகரு விழிகளால்)

தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரையிலை நீர் நீதானா (ஒரு மல்லிச்சரமே)
தனியொரு அன்றில் நீதானா (இலைசிந்தும் மரமே)
புயல்தரும் தென்றல் நீதானா (புது வெள்ளிக்குடமே)
புதையல் நீதானா (மதன் பின்னும் வலையா)
ஒரு மல்லிச்சரமே

பருத்திவீரன் பாடல்

ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும் (2)
நாம்பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையய் (2)
கூடுனமே கூடுனமே கூட்டுவண்டிக் காளைபோலே (2)
மாட்டுனமே மாட்டுனமே நாரப்பய கையுமேலே (2)

நிறுத்துங்கடி ஏ நிறுத்துங்கடி நிறுத்துங்கறேன்ல
பாடுங்கடின்னா என்ன நக்கலா
ஏய் நீ வா நீ இங்கே வா எல்லாம் வரிசையா நில்லு
நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும் என்ன
யோவ் இங்க பாருய்யா கண்டபக்கம்லாம் கையவைச்சின்னா
உனக்கு மரியாதை இல்லை ஆமா
இங்க பாருய்யா வெக்கத்தை ஏய் அட்றா

நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி
கத்தரிப்பூ ரவுக்கை போட்ட சின்னப்பைங்கிளி (2)
உன்னை Quarter-க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி (2)

குத்து-ன்னா இப்படித்தான் குத்தனும்

ஆளில்லாத காட்டுக்குள்ளே பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
Night எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா எனக்கு காலு
அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்டே
நீயும் பாசாங்கம் பண்ணாதடி பண்ணாதடி
பருவமுள்ள பையங்கிட்டே
நானும் பாசாங்கம் பண்ணவில்லை
பாசாங்கம் பண்ணுரன்டு நீயும்
அறிவுகெட்டு பேசாதடா நீ அறிவுகெட்டு பேசாதடா

அடி மாடிமேலே மாடிவெச்சு மாரளவு ஜன்னல் வெச்சு
அப்டி போடு சித்தப்பு
எட்டி எட்டிப் பாத்தாலுமே எரவப்பொண்டாட்டி நீதான்டி
ஆஹா ஆஹா ஆஹா
அடி காதறுந்த மூளி உன்னைக் கட்டுவன்டி தாலி (2)
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்
பொசக்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா
நெத்தியிலே ஆமோய்
நெத்தியிலே பொட்டுவைச்சு நீவரணும் சேலைகட்டி (2)
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே (2)
நீ மனசுவெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை (2)
கோணாங்கிரப்பு வேட்டி குதிங்கால் உயர்த்தி கட்டி (2)
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க (2)
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க (2)
அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு (2)
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும்வழியிலே (2)
உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கமுடியலை (2)

போடா போடா பொடிப்பயலே புத்திகெட்ட மடப்பயலே (2)
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானாம்
உனக்கும் எனக்கும் சண்டை இப்போ ஒடையப் போகுது மண்டை (2)
அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு (2)
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது (2)
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது (2)
ஆமோய்

என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீயளே
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே
நீங்க ஊதுரியளா நான் ஊதவா

சிறகுகள் நீளுதே

சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே துள்ளித்துள்ளிப் போகுதே
புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளிப் பருகுதே

என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா
இன்று காணும் நானும் நானா
உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே

ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
உன் முகத்தைப் பார்த்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா
நானும் மாறிப் போனதேன்
என் நளினம் கூடிப் போனதேன்
அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா
ஓ வாஹா ஓ வாஹா யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா (2)
(என்னைக் கொஞ்சம்)

வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒருமுறைகூட நின்று ரசித்ததில்லை
இன்றுமட்டும் கொஞ்சம் நின்று
ஒரு பூவைக் கிள்ளிக்கொண்டு
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை
நீ கிள்ளும் பூக்களே நான் சூடிக் கொள்ளவே
என்கின்ற எண்ணம் இன்று வந்தாச்சே
ஆனாலும் நேரிலே எப்போதும்போலவே
இயல்பாகப் பேசிப்போவது என்றாச்சே
(என்னைக் கொஞ்சம்)
(சிறகுகள் நீளுதே)

என்னை இங்கே வரச்செய்தாய்
என்னெனவோ பேசச்செய்தாய்
புன்னகைகள் பூக்கச்செய்தாய் இன்னும் என்ன
அருகினில் அமர்ந்தென்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துருதுரு பார்வைக்குந்தான் அர்த்தம் என்ன என்ன
என் பார்வை புதுசுதான்
என் பேச்சும் புதுசுதான்
உன்னாலே நானும் மாறிப்போனேனே
கூட்டத்தில் என்னைத்தான்
உன் கண்கள் தேடணும்
என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே
(என்னைக் கொஞ்சம்)
(ஒண்ணே ஒண்ணு சொல்லணும்

பருத்திவீரன் பாடல்

அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடியாத்தி ரெண்டும் பறக்குதே
செடிபோல ஆசை மொளைக்குதே

வெட்டவெளிப் பொட்டலிலே மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி கூரையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியிலே சீர்வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர்வரும்

ஓஹோ அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டுப் படிக்கல
எந்தக் கெழவியும் சொன்ன கதையில
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
ஒறவுக்கு இதுதான் தலைமை
இதை உசுரா நெனைக்கும் இளமை
காதலே கடவுளின் ஆணை
அவன் பூமிக்குத் தொட்டுவச்ச சேனை
ஒடைமாத்தி நடைமாத்தி அடியாத்தி இந்த வயசுல
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

கறந்தபாலையே காம்பில் புகுத்திட
கணக்குப் போடுதே ரெண்டுந்தான்
கோரைப்புல்லிலே மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது தோளுல சாயுது
ஊரையும் ஒறவயும் மறந்து
நடுக்காட்டுல நடக்குது விருந்து
நத்தைக்கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமோ சேர்ந்து
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி இந்த வயசுல
(அறியாத வயசு)


ஒரு கூடை Sunlight

Give me one time style yea
Give me two time style yea
Give me three time style yea

ஒரு கூடை Sunlight
ஒரு கூடை Moonlight
ஒன்றாக சேர்ந்த கலர்தானே என் White
அப்பத்தான் வெச்ச கருப்பே இப்பத்தான் செக்கச்சிவப்பே
எப்போதும் பச்சைத்தமிழன் இப்போ நான் வெள்ளைத்தமிழன்

அட அட அட அசத்துது ஸ்டைல்
நட நட நட நடப்பதும் ஸ்டைல்
கட கட கட சிரிபதும் ஸ்டைல்
பட பட பட பேச்சிலும் ஸ்டைல்

கலக்குது உன் ஸ்டைல்
இழுக்குது உன் ஸ்டைல்
ஜெயிக்குது உன் ஸ்டைல்
குழந்தைக்கும் உன் ஸ்டைல்
இளசுக்கும் உன் ஸ்டைல்
பெருசுக்கும் உன் ஸ்டைல்

(அட அட அட)

சுட சுட சுடத் தொடுவதும் உன் ஸ்டைல்
தட தட தட அதிரடி ஸ்டைல்
அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல்
வர வர எல்லாமே ஸ்டைல்

ரகளை செய் ரௌத்திரவீரா
மிரளச்செய் மன்மதமாறா
கனிதேடும் கலகக்காரா
கண்தடவும் கந்தள மாறா
'கிண்'னென்ற கன்னியை பூரா
தின்னின்று வெள்ளைக்காரா

அடடா நீ கைத்தடி மிட்டாய்
நடந்தாய் நீ பறக்கிற தட்டாய்
இருந்தாய் நீ உருவத்தில் எட்டாய்
மலர்ந்தாய் நீ மொழுமொழு மொட்டாய்
ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்
ஜி என்னும் சொல்லிலே சுட்டாய்
ஈபில் டவர் இதயத்தில் நட்டாய்
பட்டாசாய் பட்டாய்
(ஒரு கூடை)

ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ ஸ்டாரோ நீ சூப்பர்ஸ்டாரோ

சிவாஜி பாடல்

Thursday, April 12, 2007

சிவாஜி பாடல்

ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்

உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி

அன்பால் பார்வையிடு அழகை சாவியிடு
உன் ஆண் வாசனை என்மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு

(வாஜி வாஜி)
(பூம்பாவாய்)

ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன் நிலவே ஒரு நிலவுடன்தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
விடியும்வரை மார்புக்குள் இருப்பேனா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேனா
ஓ பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம் செயல்புயல் நானடி
(வாஜி வாஜி)
(பூம்பாவாய்)

பொன்வாக்கியமே வாய்வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்துகொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
ஆனந்தவெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்துகொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி
வெண்ணிலவை சகதியும் ஆக்கிவிட்டேன்
அடடடா குமரியின் வரங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
(வாஜி வாஜி)
ஓ (பூம்பாவாய்)

(உன் பூவிழி)
(ஆம்பல் ஆம்பல்