Wednesday, May 19, 2010

இறகைப்போலே அலைகிறேனே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

படல் :இறகைப்போலே அலைகிறேனே

படம்: நான் மகான் அல்ல

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா

வரிகள்: யுகபாரதி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்
அனியாயக் காதல் வந்ததே
அடங்காத ஆசைத் தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல்
போலே தொட்டுச்சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே ஊன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே
(கண்ணோரம்..)

ஹே என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போச்சே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்ல
ஓஹோ ஹோ ஹோ
என் மீதிலே உன் வாசனை
எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே என்னை சேராமல்
வாழ்வில்லை ஓஹோ ஹோ
அன்பே உன்னை சேராமல்
வாழ்வில்லை ஓஹோ ஹோ
நீ என்னைக் காண்பதே
வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால்
தூரல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

விழி ஒரு பாதி விரல் ஒரு பாதி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் :விழி ஒரு பாதி விரல்

படம்:சிக்கு புக்கு

இசை:ஹரிஹரன் - லெஸ்லி

பாடியவர்கள்:அட்னான் சாமி, சுஜாதா

வரிகள்:வாலி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

விழி ஒரு பாதி விரல் ஒரு பாதி
விரும்பிய பூந்தேகம் நிற்கும் நேரம்
தொலைந்தது பாதி கொதித்தது பாதி
கொடுத்தது போதாமல் கேட்கும் நேரம்

சிறு நூலாடை போல நான்
இடை மேல் ஆட வேண்டுமே
அதற்கொரு நாள் பார்த்து வருகிறேன்

(தொலைந்தது..)

நீ வைத்த விழிகளில் ராவெல்லாம்
நான் வைத்த கனவுகள் போதுமோ
நீ வைத்த கனவுகள் நாளெல்லாம்
தீ வைத்த கொடுமையை கூறவோ
நிதம் வரும் வரும் நீல மேகம் நாம்
நேசம் கண்டு நல்வாழ்த்துக்கள் கூறவும்
இலக்கணம் தழுவிய இலக்கிய உறவிது
தேவ தேவி தாங்கள் மேனி அணைத்தேன்

(தொலைந்தது)

தூரத்தில் இருக்கின்ற வான் அதன்
ஈரத்தில் மிதக்கின்ற வாடையில்
நெஞ்சத்தில் இனிக்கின்ற காட்சிகள்
நாம் கொண்ட உறவுக்கு சாட்சிகள்
பிறர் விரல் தொடும் நீங்கிடாது
ஒரே நோன்பிடாது நம் நேசம் வாழும்
இடி பல கலங்கிது
எவர் இதை அறிவது
வானம் பூமி வாழும் காலம் வரை

(விழி ஒரு பாதி )

என் இதயம் இதுவரை துடித்ததில்லை

என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே


கூட்டத்திலே நின்றாலும்
உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும்
உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே
மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம்
வந்தேன் தஞ்சம்
தாவணி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறடி
இழுத்தாய்

என் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே


உன்னிடம் எப்போதும் உரிமையாய்
பழகிட வேண்டும்
பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும்
தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என்நெஞ்சில்
இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே
மிரட்டுதே உந்தன் குணங்கள்
இத்தனை நாட்களாய்
படுத்ததும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே
உன்னைக் கண்டு விழித்தேன்

என் இதயம்

என் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே
காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே


சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என்கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே

தத்தி தாவும் paper நான்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : தத்தி தாவும் paper நான்
படம்:பாஸ் என்ற பாஸ்கரன்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்:கார்த்திக்
வரிகள்:நா. முத்துகுமார்
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

தத்தி தாவும் paper நான்
என்னை boata போல செஞ்சாலே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாலே
Inku போன பெண்ணை நான்
வந்து wine-அ ஊத்தி போனாலே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல ஒடச்சாலே

என்ன பாடுறேன் என்ன பேசுறேன்
எனக்கு புரிய -வில்லை
எங்கு போகிறேன் என்ன பண்ணுறேன்
எனக்கு தெரிய -வில்லை

உன்சொந்தம் நான் என் அன்பு நீ
உன் mummy என் aunty
உன் sister-உம் என் brother-போல்
என்றுமே நாம் வாழலாம் வா வா

சட்டை பக்கெட் -இல் வைக்கிற
Cigaratte பக்கெட் -ah மாறுற
Heart-u பக்கத்தில் செல்லமா
சீண்டுற -aahhhh

Hero honda-va ஓட்டுறேன்
Hero-போலவே மத்துற
Zero பக்கத்தில் கோடுத்தான்
போடுற -aahhhh

College போயும் தேரல
Knowledge எதுவும் ஏறல
Marriage பண்ண தேவல
மானே உடனே வா

தத்தி தாவும் paper நான்
என்னை boata pola செஞ்சாலே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாலே
Inku போன பெண்ணை நான்
வந்து wine-அ ஊத்தி போனாலே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல ஒடச்சாலே

Town-nu bus-ula ஏறியே
Ticket வாங்கி நீ நீட்டுனா
வெது டிக்கெட் -உம் lottery ஆகுமே

England-huku ராணியா
English நீ பேசினா
ABCD-a நேசிக்க தோணுமே
Incomeing calluku காசு இல்ல
Outgoing callukum காசு இல்ல
உன் number தவிர பேசல
மானே உடனே வா