Tuesday, May 22, 2007

உனக்கென்ன மேலே

ONE...TWO...THREE...FOUR
தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம்
தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
(உனக்கென்ன)
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம்

ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)

0 comments: