Thursday, May 17, 2007

முத்து மணி மாலை

முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

கொலுசுதான் மெளனமாகுமா
மனசுதான் பேசுமா
மேகந்தான் நிலவை மூடுமா
மவுசுதான் கொறயுமா
நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

காலிலே போட்ட மிஞ்சிதான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாடுதே
நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நாந்தானே
அத்திமரப் பூவும் அச்சப்படுமா?
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

0 comments: