Tuesday, May 22, 2007

ராசா ராசா உன்ன

பெ: ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்
நெஞ்சுல ரோசா பூவப் போல
ஆ: அடி கண்ணே கண்ணே
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணு மணியப் போல
பெ: என்ன பொத்தி வக்கும் எங்க பட்டாயத்துல
ஆச பொத்தி வச்சேன் தினம் ஒன் நெனப்புல
ஆ: நீயும் இல்லாம நானும் இல்ல

(ராசா)

ஆ: ராசாத்தி நீயும் தான் பூக்கோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்
பெ: சாமிய சந்திச்சா என்னாளும் வாழத்தான்
உன்னோடு சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்
ஆ: தோளிலே ஊஞ்சல் கட்டி தோக மயில தாலாட்டுவேன்
பெ: வீசும் காத்து ஜல்லடையாலே ஜலிக்க பூசி எடுப்பேன்
உனக்கு மூச்சி கொடுப்பேன்
(ராசா)
ஆ: முல்லப்பூ காம்பு தான் உன் கைய குத்தாதா
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா
பெ: செம்மண்ணு புழுதி உன் கண்ணில் விழுமே
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா
ஆ: மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி
பெ: உனக்கு வலிச்சா அரை நொடி நானும்
உசிர கையில் எடுப்பேன் உனக்கு நானும் கொடுப்பேன்

(ராசா)

0 comments: