Thursday, May 24, 2007

நிஜமா?? நிஜமா??

நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??
நீ வந்த நொடி நிஜமா??
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??
நீ நான் நாம் நிஜமா??
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே..
மழை நின்ற போதும், மரக்கிளை தூறுதே...
பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே...
பார்க்கும் போதே கண்கள் பறி போகுதே...
( நிஜமா?? நிஜமா?? )

நேற்று இன்று நாளை என்பதென்ன ?? காலம் உறைந்து போனதே...
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச... கடவுளாக தோணுதே..
வேற்று கிரகம் போல எனக்கு.. எந்தன் வீடு ஆனதே...
வெற்று கோபம் என்ற அர்த்தம் மாறி.. வெட்கமாகி போனதே..
வண்ணத்து பூச்சி இறகால் மோதியே...
வானமும் விழுந்தால் அது தான் காதலே...
இடி மின்னல் மழை இந்த மூன்றுமே... இதயத்தில் தந்தால் அது காதலே...
( நிஜமா?? நிஜமா?? )

கோடை வாடை இளவேனில்காலம் கார்காலம நான்குமே..
காதல்காலம் எந்தகாலம் என்று உண்மை சொல்ல கூடுமோ??
கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு என்ற திசைகள் நான்குமே..
காதல் எந்த திசையில் செல்லுமென்று மெய் சொல்ல கூடுமோ??
கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே...
கடைசி வரைக்கும் சுமப்பேன் உன்னையே...
உயிர் அறை ஒன்றை உருவாக்கியே... உயிர் உள்ளவரை உன்னை போற்றுவேன்.

கனவா கனவா?? இது என்ன கனவா?? நீ வந்த நொடி கனவா??

1 comments:

வசீகரா said...

Hi,
Recently I have heard a song that starts with
உயிரே கனவில் வாழும் தேவதையே
சகியே நேரில் வாடி கண்மணியே!
(uyirae kanavil vaazhum dhaevadhaiyae
chakiyae Naeril vaadi kanNmanNiyae)

Please let me know which movie/ album this is!