Thursday, May 17, 2007

மனசே மனசே

மனசே மனசே மனசே மனசே
குழப்பமென்ன இது தான் வயசே காதலிக்க

ஆ: பூக்கள் மீது பனி துடைத்து
கவிதைகள் எழுதுகிறேன்
பெ: காதல் கடிதம் நீ கொடுத்து
நிலவினை தூதுவிடு (

மனசே)

ஆ: நீ தினம் தினம் சுவாசிக்கத்தானே
காற்று தென்றலாய் நானும் ஆகவா
பெ: நீ இனி தினம் வாசிக்கத்தானே
உந்தன் கையில்நான் வீணையாகவா
ஆ: மழை இல்லை நனைகிறேன்
நம் காதல் மின்சாரமா
பெ: உன்னை கண்டு உறைகிறேன்
உன் பார்வை மின்சாரமா
ஆ: என்னை தந்தேன் உன்னைக் கொடு
பெ: உன் கனவிலே நான்வரத்தானே
தினமும் இரவிலே விழித்திருப்பேன்
ஆ: உன் மனதிலே குடிவரத்தானே
உனது விழியிலே நீந்திடுவேனே
பெ: ஒரே முறை நிழல் தொடும்
எங்கெங்கும் நீயாகுமா
ஆ: ஒரே ஒரு வரம் கொடு
உன்னோடு நான் வாழவே
பெ: சுகம் தரும் கடல் இதோ

(மனசே)

0 comments: