Friday, May 11, 2007

ரோஜாவைத் தாலாட்டும்

ஆண்:
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்..ஆ..

(ரோஜாவை.........)

ஆண்:
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

பெண்:
மௌனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆ...

(ரோஜாவை........)

பெண்:
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்

ஆண்:
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஓ...

(ரோஜாவை..........)

0 comments: