Friday, May 11, 2007

மின்னலே நீ வந்ததேனடி

மின்னலே நீ வந்ததேனடி - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

(மின்னலே............)

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே - உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே - இங்கு
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்



(மின்னலே............)

பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா - நான்
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே.........)

0 comments: