Friday, May 11, 2007

தென்மேற்குப் பருவக்காற்று

ஆ:
தென்மேற்குப் பருவக்காற்று
தேனிப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக் கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்

பெ:
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டு விட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க....

(தென்மேற்கு..........)

ஆ:
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

பெ:
தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

ஆ:
மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

பெ:
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே....

(தென்மேற்கு........ )

பெ:
நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாமென்ற ஒரு வார்த்தை உண்டானதே

ஆ:
ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆளென்ற ஒரு வார்த்தை உண்டானதே

பெ:
காதலென்ற மந்திரத்தின் மாயம் என்ன
கள்ளும் முள்ளும் இப்போது பூவானதே

ஆ:
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....

(தென்மேற்கு........)

0 comments: