Friday, May 11, 2007

உயிரே என் உயிரே

ஆண்
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி


ஆண்
இதுவரை எங்கிருந்தோம் ,,?
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்,,?

பெண்
உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்..
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா..?
இன்னும் என்னை புரியலையா..?

ஆண்
... நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் மனதை நீ கொடுத்தாய்
.... நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அணைத்தாய்

பெண்
எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

ஆண்
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

பெண்
என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

ஆண்
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி


பெண்
உன்னுடன் இருக்கயிலே..
.. நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா...
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா...ஆ?

ஆண்
உன்னுடன் நடக்கயிலே ...
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதே...

பெண்..
நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

ஆண்.
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

பெண்
உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறது
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறது

ஆண்
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

பெண்
எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா ரத்த ரத்தத்தாரா........
... நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா............

0 comments: