Friday, May 11, 2007

மனசுக்குள் ஒரு புயல்

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பேர்தான் என்ன
புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய்
அடுத்த நிலைதான் என்ன

இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்
என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும்
பூவில் பூகம்பம் நேரும்
பூகம்பம் நேரும்
பூவில் பூகம்பம் நேரும்

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பேர்தான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்

ஆஹாஹாஹாஹாஹாஆ
ஓஹோஹோஹோஹோஓ
ஹோஹோஹோஹோஹோ
லலலா

மூச்சு விடவும் மறந்துவிட்டேன்
மூச்சு விடவும் மறந்துவிட்டேன்
எனக்கென்று பெயரில்லை அன்பே
என் உடலில்லை இங்கே என்
உயிரில்லை உயிரே

என்ன புதுமை அட தூக்கம்
என் இடக் கண்ணில் கனா
என் வலக் கண்ணில் நிஜமா

மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முற்று பெற்று திரும்புதல் போல
உன் மடியில் சொல்லால் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்
உன் பொன்னடி வாழ்க

நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பேர்தான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்

மேற்கில் போன பறவை ஒன்று
மேற்கில் போன பறவை ஒன்று

மே மாதத்தில் எனக்கொரு
கன்னிப் பெண் வருமென்று
காதில் பண் பாடிவிட்டுச் சென்றது
என்ன வியப்பு அந்தப் பாடல்
பண் தேயும் முன்னே கண்ணே
என் கண்கள் உன்னைக் கண்டது

பருவத்திலே ஒரு முறை பூத்தேன்
பார்த்ததிலே மறுமுறை பூத்தேன்
உன் மார்பின் மையத்தில் எனக்கொரு
குடிசை போட்டு நான் வாழ்ந்திட வேண்டும்

நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க

0 comments: