Wednesday, June 6, 2007

உடையாத வெண்ணிலா

உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்

(உடையாத)

அந்தி மஞ்சள் மாலை
ஆளிலாத சாலை
தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
கன்னம் என்னும் பூவில்
கைகள் செய்த காயம்

ப்ரியம் ப்ரியம் (4)

(உடையாத)

கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சிநேகம்
முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
இரண்டு பெயரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்

ப்ரியம் ப்ரியம் (4)

(உடையாத)

0 comments: