Saturday, June 9, 2007

உன் பார்வையில்

உன் பார்வையில் பைத்தியமானேன்
உன் வார்த்தையில் வாக்கியமானேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான்
உன்னில் மறை முகமானேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட
குதித்தேன் நானே

எது இதுவோ எது இதுவோ
உன் நெஞ்சம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள் என்ன
என்று நான் சொல்லுவேன்
இது அதுவோ இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே
என் தோழி நீ உன் தோழன் நான்
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆணாசை நான் பெண்ணாசை நீ
ஆசைகள் பேராசை தான்

உனதருகே இருப்பதனால்
இரவுக்குத் தெரியாத பகலுக்குப் புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்
இதயத்தில் நீ இருப்பதினால்
நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே
தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே நான் ஓடோடி வாழ்வேன்
காதல் எனும் கடிதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்

0 comments: