Thursday, November 1, 2018

கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்


பாடல்  : கண்ணை விட்டு கன்னம் பட்டு
படம் : இருமுகன்
வரிகள் : மதன் கார்கி
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர் : திப்பு 

+++++++++++88888888888888+++++++++++


கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
என் கண்ணீரே என் கண்ணீரே…
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே…
மழையாய் அன்று பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே

இன்னும்இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனா
காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு நான் நுழைப்பேனா
செதிலாய் செதிலாய் இதயம் உதிர
உள்ளே உள்ளே நீயே
துகளாய் துகளாய் நினைவோ சிதற
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே

தனி உலகினில் உனக்கென நானும்
ஓர் உறவென உனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய்
நீயே தெரிந்தாயே
உன் விழி இனி எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே
பிணமாய் தூங்கினேன்
ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ
ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே
யார் யாரோ போலே நாமும் இன்கே
நம்முன் பூத்த காதல் எங்கே

கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
மழையாய் அன்று பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே
கண்ணை விட்டு கன்னம் பட்டு


4 comments:

Kailash said...

Very nice song
Also see Alka Yagnik Songs

Unknown said...

nice song

Unknown said...

Super

Anonymous said...

Sell your kidney in India with the sum of $500,000,00,For more info Email: healthc976@gmail.com
Call or whatsapp +91 9945317569