Thursday, November 1, 2018

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்

பாடல்  : கார்குழல் கடவையே
படம் : வட சென்னை
வரிகள் : விவேக்
இசை : சந்தோஷ் நாராயண‌ன்
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி , பிரதிப் குமார்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை

கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்

கார்குழல் கடவையே என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்

உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று

தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று

இணையாய் உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்

எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே

கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள்

0 comments: