Saturday, March 17, 2007

அழகே பிரம்மனிடம்

ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்


ஆ:
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா..?

பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ:
உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான்
மனதால் நானும் அன்னையே.
மறவேன் என்றும் உன்னையே

பெண்:
நான் பாலைவனத்தின் விதை போல்
... நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே

ஆ:
உந்தன் விழி திறந்திருத்தால் விடியலே தேவை இல்லை

பெண் :
உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை

ஆ:
இத்தனையும் இனி கிடைக்குமா?

பெண்:
கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்


ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ:
என் இந்த பிறவி என்று இது வரை நினைத்து இருந்தேன்
உயிரை உன்னை பார்த்ததும்..
உலகே புதிதானதே

பெண் :
என்னை படைத்த அந்த தெய்வம்..
என்னை சுமந்த அன்னை தெய்வம்..
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..

ஆ:
பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும்

பெண் :
உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்

ஆ:
சொன்ன தெல்லாம் இனி நடக்குமா?

பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்


ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று.........
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ..


ஆ:
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா..?


பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்



0 comments: