Thursday, November 8, 2007

கறுகறு விழிகளால்

கறுகறு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
நீ... ஒரு மல்லிச்சரமே
நீ... இலை சிந்தும் மரமே
என் புது வெள்ளி குடமே
உன்னை தேடும் கண்கள்

ஏய்.. நீ தங்கச்சிலையா
வெண்.. நுரை பொங்கும் அலையா
மன்.. மதன் பிண்ணும் வலையா
உன்னை தேடும் கண்கள்

புதுப்புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ

தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

நீ... ஒரு மல்லிச்சரமே
மண்ணில்... இலை சிந்தும் மரமே
மின்னும் புது வெள்ளி குடமே
உன்னை தேடும் கண்கள்

ஏய்.. நீ தங்கச்சிலையா
வெள்ளை.. நுரை பொங்கும் அலையா
அம்பால்.. மதன் பிண்ணும் வலையா
உன்னை தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை

கறுகறு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க

தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரை இலை நீர் நீதானா (ஒரு மல்லிச்சரமே)
தனியொரு அன்றில் நீதானா (இலை சிந்தும் மரமே)
புயல் தரும் தென்றல் நீதானா (நீ தங்கச்சிலையா)
புதையல் நீதானா (மதன் பிண்ணும் வலையா)

ஒரு மல்லிச்சரமே

0 comments: