Wednesday, February 15, 2012

கண்கள் நீயே..காற்றும் நீயே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : கண்கள் நீயே..காற்றும் நீயே

படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்

இசை: ஜி.வி.பிரகாஷ்

பாடியவர்கள்:சித்தாரா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நினைவே
இயக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே
இதழை செல்லி
எனும் தீர்த்த தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய்

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழைந்தாயக
என்றும் இருக்க வேண்டினேன்
தூளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாலே பல பல ஓசை
செய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்

எனை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன் விரல் மேதைகுள்
என் முத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
குறையா நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடலை ஐயிந்தாறு மலை ஐயிநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

4 comments:

Umesh Srinivasan said...

அருமையான வரிகள். சில இடங்களில் எழுத்துபிழைகளைத் தவிர்த்தால் உங்கள் அரிய பணி இன்னும் சிறப்புறும்.

Unknown said...

பாடலாசிரியர் கவிகர் தாமரை

Unknown said...

பாடலாசிரியர் கவிகர் தாமரை

Anonymous said...

My favorite song