Monday, November 9, 2009

ஒரு சின்னத் தாமரை


ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

என் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப்புன்னகை சுடுதே
என் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா
உன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே

என் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூப்பூக்கும்
உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்

உன் தெரு பார்த்தாலே
என் கண்கள் அலைமோதும்
உன் வாசல் தேடிப் போகச்
சொல்லிக் கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில்
எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்
(ஒரு சின்ன..)

உன் குரல் கேட்டாலே அங்கு
குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள்
மட்டும் மோட்சத்தினைச் சேரும்
அனுமதிக் கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய
கோபுரம் நொடியில் குடை சாயும்

உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது
(ஒரு சின்ன..)

0 comments: