Tuesday, August 25, 2009

ஒரு வெட்கம் வருதே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே…..
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..
இது தரும் தடம் தடுமாற்றம் ….சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே….
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே….
துடித்துடித்திடும் மனமே…
வர வர வரக் கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே…. நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால்…..உறங்குவேன்

ஆணின் மனதிற்க்குள் ….
பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே …
நெஞ்சம் துடிக்கிறதே

பெண்:
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே….

இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்

இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே…

தில்லாரே தில்லாரே தில்லா தில்லாரே…
தில்லாரே தில்லாரே……..
ஓஹோ ஹா….

காற்றில் கலந்து நீ
என் முகத்தினை
நீயும் மோதினாய்….
பூ மரங்களில்
நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்……

ஓ….
தூது அனுப்பிடவே …
நேரம் எனக்கில்லையே…
நினைத்தப்பொழுதினிலே…
மரணம் எதிரினிலே….

வழிகளில் ஊர்கோலம்
இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே
நனைந்திடுவோம் நாள்தோறுமே..

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே…..

இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..

ஓ….போகச்சொல்லி கால்கள் தள்ள

நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே…

ஒரு தேவதை பார்க்கும்

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது
இதயமே ஓ இவளிடம்
உருகுதே ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓ என்றாலும் ஓ
கேட்காதே ஓ..

என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வாழ்க்கை தெரிஎதும் தொலைத்து போகிறேன்
காதல் என்றால் ஓ பொல்லாதது
புரிகின்றது ஓ

கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரணன் நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
(ஒரு தேவதை..)

இப்பவே இப்பவே

ம்….ம்…..ம்….ம்…..
ம்….ம்…..ம்….ம்…..


இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

ம்….ம்…..ம்….ம்…..

இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

ம்….ம்…..ம்….ம்…..

கண்ணை மூடி உன்னைக் கண்டால்
அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால்
அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே……….

வெள்ளச் சேதம் வந்தால் கூட
தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால்
என்ன செய்வது

முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால்
ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்
நித்தம் யுத்தம் தான்

சொல்லித் தீரா
இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு
கூத்தாட‌…

மின்னல் கண்ட
தாழை போல
உன்னால் நானும்
பூத்தாட‌…..

உன்னைக் கண்டேன்
என்னைக் காணோம்
என்னைக் காண
உன்னை நானும்

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே….
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே…..

எந்தன் வாழ்வில் வந்ததின்று
நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே
செல்ல விருப்பம்

நெஞ்ச வயல் எங்கும் உன்னை
நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம்
இட்டு வைக்கிறேன்

உன்னைக் காண
நானும் வந்தால்
சாலை எல்லாம்
பூஞ்சோலை….

உன்னை நீங்கி
போகும் நேரம்
சோலை கூட
தார்ப்பாலை…

மண்ணுக்குள்ளே
வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட
அப்பவே அப்பவே

கைவளையல் ஓசை கேட்ட
அப்பவே அப்பவே

ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே

அன்பே என் அன்பே

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
கனவினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

முன்தினம் பார்த்தேனே

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்கலூம் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
(முன்தினம்..)

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி
(முந்தினம்..)

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே
(முன்தினம்..)

Wednesday, August 5, 2009

சின்னஞ்சிறுசுக மனசுக்குள்.....

சின்னஞ்சிறுசுக மனசுக்குள்
சிலு சிலுன்னுசின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள்
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க
போதுவாக பருவம் ஒரு பூந்தோட்டம் ஆச்சு
என் காலு வளைக்குள் ஒரே நீர் ஓட்டம் ஆச்சு
விலகாதஉறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு

புத்தம் புதுசுக நெனப்புக்குள்
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க
சின்னஞ்சிறுசுக மனசுக்குள்
சிலு சிலுன்னு சின்ன தூரல் போட

சிடுமூஞ்சி நீதான் என்று
சொல்லி சொல்லி கேலி கேலி
சின்ன சின்ன சேட்டை செய்தேன் நான்
சந்து பொந்தில் நீதான் வந்த
ஒத்திபோக ஒத்துக்காம
சண்டியர் போல் வம்பு செய்தேன் நான்

ஓ....
அரை டிரயர் போட்ட பையன்
நீ படாத லாவணி
விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி
விளையாட்டா
இருந்த முகம் ஏன் வெளிறிபோச்சு
வேரென்ன பூப்பூ அடைஞ்ச
விவரம் தெரிஞ்சாச்சு
குறும்பாத்தான்
திரிஞ்ச பொண்ணு ஏன் குமரி ஆச்சு
வேரென்ன உடம்பு உனக்கு வழங்க முடிவாச்சு

ஆஹ்...

மண்ணாலதான் வீடு கட்டி
நானும் நீயும் வாழுறப்போ
மீன் கொழம்பு ஆக்கி போட்ட நீ
ஓ ஹோ...
கமருகட்டு கடல முட்டாய்
வாங்கினாக்க வாயில் வெச்சு
காக்கா கடி கடிச்சு தந்தாய் நீ
ஓ ஹோ...
ஓ கருவாட்ட போல
தீயில என் நெஞ்ச வாட்டின
அங்காள அம்மன்
கோயிலில் கண் ஜாட காட்டின
அடி ஆத்தி
மனசுக்குள்ள பூ வெச்சதாரு
வேராரு ஆடி அசையும்
அழகு மணி தேரு
அடி ஆத்தி
நெனபுக்குள்ள போய் நின்னதாரு
வேராரு கூச்சம் விடத்த
ஈச்ச மர பூவு..

சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க

லேசா பறக்குது மனசு மனசு

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில நெல்லைபோல் உந்தன்
நெனப்ப எனக்குள்ள சேர்க்குற
அல்லிப்பூ கொளத்துல கல்லைப்போல் உந்தன்
கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன்

கருச்சாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

(லேசா... )

பொத்தி பொத்தி போகும் தலச்சபுள்ளப்போலே
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையறேன் சுகமா

தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரிப் பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா

(கருச்சாங்குருவிக்கு... )

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரிகிற ஒலகம் ஒலகம்
தரிசா கெடந்தது இதுவர

ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே
ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சதே
சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன்
ரெட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சனே
ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
உனக்குதான் உனக்குதான் பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல் மனசு காதல சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி
(கருச்சாங்குருவிக்கு... )

Monday, August 3, 2009

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

படம்: புவனா ஒரு கேள்விக்குறி
எழுதியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
குரல் : S.P. பாலசுப்ரமண்யம்

.................................................................................................................................
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ம்... ம்.... ம்....

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே

நச்சு மனம் மச்சினியோடு
மச்சினியோடு மருகுதடி
அவ நெத்தியில வச்ச பொட்டுல - என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
நெத்தியில வச்ச பொட்டுல என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!

வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு!

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி...

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

உச்சந்தல வகிடு வழி
ஒத்த மனம் அலையுதடி
ஒதட்டு வரி பள்ளத்துல
உசிரு விழுந்து தவிக்குதடி

பாழாப் போன மனசு
பசியெடுத்து
கொண்ட பத்தியத்த முறிக்குதடி
பாராங்கல்ல சொமந்து
வழி மறந்து - ஒரு
நத்தக்குட்டி நகருதடி!
கொண்டக் காலு செவப்பும்
மூக்கு வனப்பும் - என்னக்
கிறுக்குன்னு சிரிக்குதடி!

ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்ட சராசரம் போச்சு
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு

ஊரான் காட்டு கனியே
ஒன்ன நெனச்சு -
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!

யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

விழி மூடி யோசித்தால்

விழி மூடி யோசித்தால்..
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே
உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள்
மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில்
முள்ளால்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி யோசித்தால்..