Wednesday, July 25, 2007

எங்கெங்கே எங்கெங்கே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா


என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே


என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

உன்னை சரணடைந்தேன்

உன்னை சரணடைந்தேன் மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா
இந்த அழகிய நிமிசம் இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிர நேரம் உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உனையே தொடர............வா


காற்று வெளி மின்மினியாய்
கண்கள் வளி நீ வந்தாய்
நானேழுதும் மேஜையிலே
எரியும் விளக்கய் ஒளிருகிராய்
எனது விரல் நீ பிடித்து
உயிரெழுத்தை எழுதுகிராய்
துணையெழுத்து நீயாக
உரவின் உலகை உயர்த்துகிராய்..
உன் வெள்ளை மனம் பொன் மஞ்ஜ்சள் நிறம்
நான் என்னை மறந்தேன்
நான் செய்த தவம் நீ
பெற்ற வரம் நான் உன்னை அடைந்தேன்
அந்த சங்கித சந்திப்பில் சந்தோச தித்திப்பில்
மழை துளியென மடியினில் விழுந்தேன்...
(உன்னை )

சேர்த்து வெளி வான்மதியாய்
நேற்று வரை வாழ்ந்திருந்தேன்
இன்று உந்தன் திருமதியாய்
உனது நினைவில் வளறுகிரேன் ..
பூவில் விழும் பனிதுளியாய்
மனதில் உன்னை நான் சுமந்தேன்
நீ கொடுத்த கனவுகளை
எனது விழியில் வாதுகிரேன்...
உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில்
நான் என்னை அறிந்தேன்
உன் பூவித்ழில் உன் புன்னகையில்
நான் இடரிவிழுந்தேன்.....
இனி உன்வாசம் என்னேடு என்வாசம் உன்னோடு...
தொகுத்திட தொலைதிட வானத்தில் பறந்த்ந்தேன்..........
(உன்னை )

Wednesday, June 13, 2007

மேற்கே மேற்கே

லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

சுடும் வெயில் கோடைக் காலம்,
கடும் பனி வாடைக் காலம்,
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து,
எழுந்திடும் மண்ணின் வாசம்,
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே!
ஓ, மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

லைலைலைலைலைலைலை லஹிலஹிலைலைலை
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

கோபம் கொள்ளும் நேரம்,
வானம் எல்லாம் மேகம்,
காணாமலே போகும் ஒரே நிலா.
கோபம் தீரும் நேரம்,
மேகம் இல்லா வானம்,
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா.
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை,
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை,
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே!
இது நீரின் தோளில் கைப்போடும்,
ஒரு சின்னத் தீயின் கதையாகும்,
திரைகள் இனிமேல் தேவை இல்லையே!

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே

வாசல் கதவை யாரோ,
தட்டும் ஓசைக் கேட்டால்,
நீதானென்று பார்த்தேனடி சகி.
பெண்கள் கூட்டம் வந்தால்,
எங்கே நீயும் என்றே,
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி.
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ,
காற்றே சிறகாய் விரிந்திடுமோ,
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ?
அட தேவைகள் இல்லை என்றாலும்,
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்,
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ?

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை சூரியன்கள் உதித்திடுமே!
மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

Sunday, June 10, 2007

ஜூன் போனால்

ஜூன் போனால் ஜூலைக் காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப்பூத்தால் தேன் வருமே
பெண்பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
(check it up,check it up)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு லவ்வில்லையே
லவ்வாச்சு நட்பில்லையே

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே
(நேற்று என்பதும்)
(ஜூன் போனால்)

அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று
கரையிருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே
(ஜூன் போனால்)

இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை
(ஜூன் போனால்)
(நேற்று என்பதும்)
(நேற்று என்பதும்

என் வீட்டுத் தோட்டத்தில்

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
ஆசை துடிக்கின்றதே

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம்...அனுபவமோ

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

சாமிகிட்ட சொல்லி புட்டேன்

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி…
கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல…
சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே…

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

மனசுக்குள்ள பொத்தி மறச்ச…
இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச…
நெசத்திலதான் தயங்கி நடிச்ச…
அடி போடி பயந்தாங்கொள்ளி…
எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…


சஹானா சாரல்



சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ (2)

சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(சஹாரா)

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா
(ஓராயிரம்) (2)

(சஹானா)
(என் விண்வெளி)
(ஓராயிரம் ஆண்டுகள்)
(சஹானா)