Wednesday, August 5, 2009

சின்னஞ்சிறுசுக மனசுக்குள்.....

சின்னஞ்சிறுசுக மனசுக்குள்
சிலு சிலுன்னுசின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள்
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க
போதுவாக பருவம் ஒரு பூந்தோட்டம் ஆச்சு
என் காலு வளைக்குள் ஒரே நீர் ஓட்டம் ஆச்சு
விலகாதஉறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு

புத்தம் புதுசுக நெனப்புக்குள்
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க
சின்னஞ்சிறுசுக மனசுக்குள்
சிலு சிலுன்னு சின்ன தூரல் போட

சிடுமூஞ்சி நீதான் என்று
சொல்லி சொல்லி கேலி கேலி
சின்ன சின்ன சேட்டை செய்தேன் நான்
சந்து பொந்தில் நீதான் வந்த
ஒத்திபோக ஒத்துக்காம
சண்டியர் போல் வம்பு செய்தேன் நான்

ஓ....
அரை டிரயர் போட்ட பையன்
நீ படாத லாவணி
விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி
விளையாட்டா
இருந்த முகம் ஏன் வெளிறிபோச்சு
வேரென்ன பூப்பூ அடைஞ்ச
விவரம் தெரிஞ்சாச்சு
குறும்பாத்தான்
திரிஞ்ச பொண்ணு ஏன் குமரி ஆச்சு
வேரென்ன உடம்பு உனக்கு வழங்க முடிவாச்சு

ஆஹ்...

மண்ணாலதான் வீடு கட்டி
நானும் நீயும் வாழுறப்போ
மீன் கொழம்பு ஆக்கி போட்ட நீ
ஓ ஹோ...
கமருகட்டு கடல முட்டாய்
வாங்கினாக்க வாயில் வெச்சு
காக்கா கடி கடிச்சு தந்தாய் நீ
ஓ ஹோ...
ஓ கருவாட்ட போல
தீயில என் நெஞ்ச வாட்டின
அங்காள அம்மன்
கோயிலில் கண் ஜாட காட்டின
அடி ஆத்தி
மனசுக்குள்ள பூ வெச்சதாரு
வேராரு ஆடி அசையும்
அழகு மணி தேரு
அடி ஆத்தி
நெனபுக்குள்ள போய் நின்னதாரு
வேராரு கூச்சம் விடத்த
ஈச்ச மர பூவு..

சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க

லேசா பறக்குது மனசு மனசு

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில நெல்லைபோல் உந்தன்
நெனப்ப எனக்குள்ள சேர்க்குற
அல்லிப்பூ கொளத்துல கல்லைப்போல் உந்தன்
கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன்

கருச்சாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

(லேசா... )

பொத்தி பொத்தி போகும் தலச்சபுள்ளப்போலே
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையறேன் சுகமா

தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரிப் பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா

(கருச்சாங்குருவிக்கு... )

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரிகிற ஒலகம் ஒலகம்
தரிசா கெடந்தது இதுவர

ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே
ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சதே
சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன்
ரெட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சனே
ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
உனக்குதான் உனக்குதான் பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல் மனசு காதல சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி
(கருச்சாங்குருவிக்கு... )

Monday, August 3, 2009

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

படம்: புவனா ஒரு கேள்விக்குறி
எழுதியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
குரல் : S.P. பாலசுப்ரமண்யம்

.................................................................................................................................
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ம்... ம்.... ம்....

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே

நச்சு மனம் மச்சினியோடு
மச்சினியோடு மருகுதடி
அவ நெத்தியில வச்ச பொட்டுல - என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
நெத்தியில வச்ச பொட்டுல என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!

வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு!

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி...

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

உச்சந்தல வகிடு வழி
ஒத்த மனம் அலையுதடி
ஒதட்டு வரி பள்ளத்துல
உசிரு விழுந்து தவிக்குதடி

பாழாப் போன மனசு
பசியெடுத்து
கொண்ட பத்தியத்த முறிக்குதடி
பாராங்கல்ல சொமந்து
வழி மறந்து - ஒரு
நத்தக்குட்டி நகருதடி!
கொண்டக் காலு செவப்பும்
மூக்கு வனப்பும் - என்னக்
கிறுக்குன்னு சிரிக்குதடி!

ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்ட சராசரம் போச்சு
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு

ஊரான் காட்டு கனியே
ஒன்ன நெனச்சு -
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!

யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

விழி மூடி யோசித்தால்

விழி மூடி யோசித்தால்..
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே
உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள்
மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில்
முள்ளால்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி யோசித்தால்..

Saturday, May 30, 2009

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழ்ம்பூவில்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்


இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்

Saturday, January 10, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)