Saturday, January 10, 2009

அடியே கொல்லுதே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீ இன்றிக் காய்ந்திடுதே
(அடியே..)

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே
துரத்துவதும் ஏனோ

முதலும் முடிவும் நீ எனத்
தெரிந்த பின்பு
தயங்குவதும் வீணோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
பொன் நேரம் வந்ததே

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே

மழைக் காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே
(அடியே..)

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால்
தள்ளி நடப்பேனே

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே
உன்னை மணப்பேனே

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே
என் மீது ஊறுதே

எல்லா வானமும் நீ
சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே
(அடியே..)

இன்னாம்மா பண்ணலாம்

இன்னாம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

Saturday nightன்னா clubbingதானே
அத 11.30க்கே மூடுனா போரிங்தானே
போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே
நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே
ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா
என்னதான் லைஃபு இது
எஞ்சாய் பண்ற வயசு இது
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

(இன்னாம்மா..)

Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ எங்க வூட்ல
Where is the party tonight..
நடு ரோட்லம்மா..
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..

இன்னாப்பா இது கொட்ஷலா கிது
டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது

தே நீ ஒன்னும் கவலப்படாத
நம்ம ஆடுனா
தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்

முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க
வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
பொண்ணை குத்தம் சொல்லாத
சந்தோஷத்தைக் கொல்லாத

Where is the party
அ ஒங்க வூட்ல பார்ட்டி
Where is the partyt..
அ நம்ம வூட்ல பார்ட்டி
Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ நடு ரோட்ல
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..
(இன்னாம்மா..)

Wednesday, November 5, 2008

தோழியா என்

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)


அவ என்ன என்ன தேடி

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

(அவ என்ன )

ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

(ஒண்ணுக்குள்ள ஒண்ணா)

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே

Friday, July 11, 2008

கண்கள் இரண்டால்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத, பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத, படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை!

(கண்கள்...)

கரைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்?
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள்...)

Saturday, May 31, 2008

அடடா அடடா

அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
(அடடா..)

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
(அடடா..)

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக அர்த்தங்கள்
(அடடா..)

தேன் தேன் தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..

என்னவோ சொல்ல தொடந்தேன்
ஏதேதோ செய்ய தொடந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அழைந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

வல்லவரும் கையை ரசித்தேன்
ஆழவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
கொத்த வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் உள்ளம் ரசித்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

சேலையில் நிலாவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
திருடனே உன்னை அறிந்தேன்
திருடிய என்னை அறிந்தேன்
என் உன்னை திருட தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
உன் தென்றல் உன்னால் அறிந்தேன்
அதில் தோசம் பின்பாய் அறிந்தேன்
நீ நடமாடும் ராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

ஏய்..
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..