Thursday, September 6, 2007

உன் பார்வை

உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்

விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்

இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்தை

உனை எண்ணி தினம் புல்லரிக்கும்
மனதினை செல்லரிக்க விடுபவள் நீதானே ..

விலா கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நள்ளிரவு ஒவ்வொன்றையும்
முள்ளிரவு என்று செய்தாயே ..

நுரையீரல் தேடும் ஸ்வாஸமே
விழியோரம் ஆடும் ஸ்வப்னமே
மடியேறி வந்தால் சௌக்யமே

உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்


சில காதல் இந்கு கல்லறைக்குள்் அடக்கம்
சில் காதல் இந்கு சில்லறைக்குள்் தொடக்கம்
அது போல அல்ல கல்லறையைக் கடந்திடும்
சில்லறையைக் ஜெயித்திடும் என் காதல்

உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அது போலக் காதல் சிகாகோ-வும் கண்டதில்லை
செஞ்சினாடும் கண்டதில்லை, சோவியத்-தும் கண்டதில்லை என்பேனே.

மழை நாளில் நீதான் வெட்பமே ..
வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே.
உளி ஏதும் தீண்டா சிற்பமே. அன்பே

உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்

விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்

உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்

விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்


0 comments: